Total Pageviews

Vettaikaran Golden Jubilee

Golden Jubilee Padagotti

23 May 2021

MGR's Political Crusade Part 2

 Sri MGR Year 104, 23rd May, Sunday

Dr.H.V.Hande was the Minister of Health and Welfare Department during our Puratchi Thalaivar MGR's rule. He had given an elaborate interview to Makkal Kural, Tamil daily. It was published in two parts. 

I have already shared the first part of the interview in our blog on the 29th January. Below is the 2nd and concluding part of MGR's political crusade in the 1970s.

And Dr.H.V.Hande also quotes the defeat of Karunanidhi in 1980 for Anna Nagar Constituency and how the result was changed in the end. 

From the newspaper:

எம்ஜிஆருக்கு ஒரே குஷி

எக்கச்சக்கமாக கேன்வாசிங். தெலுங்குபிராமின்ஸ் வீதியில் மட்டும் 3500 ஓட்டு. ஓட்டுகள் எண்ணப்படுகிறது. இரவு நேரம். ரிசல்ட்டு வருகிறது.

எம்ஜிஆர் வீட்டில் நானும், திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற மாயத்தேவரும் அமர்ந்து இருந்தோம்.

ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அரங்கநாயகம் வெற்றி பெறுகிறார். இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர், மூன்றாவது இடத்தில் திமுக வருகிறது.

ரிசல்ட்டு கேட்டு எம்ஜிஆருக்கு ஒரே குஷி. முதுகில் தட்டி பாராட்டினார்.

1973ல் திண்டுக்கல்லில் எம்ஜிஆர் வெற்றி பெற்றவுடன், தமிழ்நாடு முழுவதும் கலைஞர் ஒரு கருத்தை பரப்பினார்.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி. சட்டசபைக்கு தேர்தல் நடந்தால் திமுக தான் வெற்றிபெரும் என்று ஒரு புரளியை கிளப்பினார். அந்த புரளி, கோவை மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பொய்யானது.

ஐசரி வேலன் மட்டுமே வெற்றி

1977ல் சட்டமன்ற பொது தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆர் அமோகமான வகையில் வெற்றி பெறுகிறார். ஆனால் சென்னை மாநகரத்தில் 14 சீட்டில் 13 சீட்டில் திமுக வெற்றி. தற்போது ஆர்கே நகர் என்று சொல்கிறோமே அந்த தொகுதியில், ஐசரி வேலன் அண்ணா திமுக சார்பில் பெற்றி பெற்றார்.

1978 ல் மீண்டும் எம்எல்சி தேர்தலில் நான் போட்டியிட்டேன். நான் அமோகமாக வெற்றி பெறுகிறேன். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, அண்ணா திமுக தோல்வி பெற்ற சென்னை மாநகரத்தில் எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. என்னை எதிர்த்து திமுகவின் மீசா கணேசன் நின்றார். டெபாசிட் இழந்தார். வெற்றி சான்றிதழுடன் நான் எம்ஜிஆரை காண சென்றேன்.

டி.நகர் கட்சி அலுவலகத்தில், என் வரவுக்காக எம்ஜிஆர் காத்திருந்தார். என்னை பார்த்தவுடன் சென்னையை மீட்டு எடுத்துட்டீங்க… என்று பாராட்டினார்.

திருவாரூருக்கு மாறிய கலைஞர்

அண்ண திமுகவில் “சென்னை மாநகராட்சி சீரமைப்பு குழு” என்று ஒன்றை உருவாக்கி, அந்த குழுவுக்கு என்னை எம்ஜிஆர் தலைவராக நியமித்தார். ஜேப்பியாரை செயலாளராக நியமித்தார்.

அங்கமுத்து, அப்துல்காதர், நிலவழகன் என ஐந்து பேர் கொண்ட உறுப்பினர்களையும் எம்ஜிஆர் நியமித்தார். 14 தொகுதிகளையும் கவனிக்கும் பணியை எங்களிடம் எம்ஜிஆர் ஒப்படைத்தார்.

நாங்கள் மூன்று மாதங்களாக தொகுதிவாரியாக சென்று 14 தொகுதிகளையும் கணித்துவிட்டோம்.

எங்கள் குழுவின் வெற்றி என்னவென்றால், சேப்பாக்கத்தில் போட்டியிட்ட கருணாநிதி, பின்னா ளில் திருவாரூரில் போட்டியிடும் நிலைமையை உருவாக்கியது தான்.


நாடாளுமன்ற தேர்தலில் சறுக்கல்

1980 ஆரம்பத்தில் நாடாளுமன்ற தேர்தல். இந்திரா காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி. ஜனதாவும் அண்ணா திமுகவும் கூட்டணி. நாடு முழுவதும் ஜனதா தோல்வியுற்ற நேரம். அதே கதி தமிழகத்திலும். போனில் ரிசல்ட்டு வருகிறது. அப்போது நானும் எம்ஜிஆருடன் ரூமில் இருந்தேன்.

கோபிசெட்டிபாளையத்திலும், சிவகாசியிலும் மட்டும் தான் அண்ணா திமுக வெற்றி பெற்றது. புதுவை உள்ளிட்ட 38 தொகுதிகளில் திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.


டெல்லி சென்ற ரகசியம்

1977ல் மொராஜிதேசாய் பிரதமராக இருந்த சமயம். காங்கிரஸ் ஆட்சி செய்த 7 மாநிலங்களின் ஆட்சியையும் டிஸ்மிஸ் செய்தார். அங்கு ஜனதா கட்சியினர் முதல்வரானார்கள். சில காரணங்களால் இந்திராகாந்திக்கு எதிரான அலை வீசிய சமயம் அது.

1980ல் பிரதமரான இந்திராகாந்தி, 7 மாநிலங்களில் ஜனதா ஆட்சியை டிஸ்மிஸ் செய்து, தேர்தலுக்கு அங்கு ஏற்பாடு செய்தார்.

இதற்கிடையில் மாறன் டெல்லி சென்றார். சஞ்சய்காந்தியை சந்தித்தார்.

மக்கள் செல்வாக்கு இழந்ததாக சொல்லி 7 மாநிலங்களில் ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்டீர்கள். எம்ஜிஆர் படுதோல்வி அடைந்திருக்கிறார். தமிழகத்திலும் எம்ஜிஆர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்யுங்கள் என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது என்று சொல்லி, எம்ஜிஆர் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.


ஆட்சி டிஸ்மிஸ்; ஓட்டலில் டின்னர்

இந்திராவுக்கு ஜனதா மீது தான் கோபம். அண்ணா திமுக மீது அவருக்கு பெரிதாக கோபம் இல்லை.

சட்டசபை கலைக்கப்பட்டது. ரேடியோவில் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டது என்ற செய்தி வருகிறது. எம்ஜிஆருக்கு ஆறுதல் சொல்லலாம் என்று, எம்ஜிஆரின் டி.நகர் அலுவலகத்துக்கு ஓடினேன்.

ஆட்சி கலைக்கப்பட்ட செய்தி அறிந்த உடன் எம்ஜிஆரிடம் சென்ற முதல் ஆள் நான்.

கம்பராமாயணத்தில், ராமனை ஆட்சி செய்ய அழைத்த போது ராமனின் முகம் தாமரையாக இருந்தது. ஆட்சி இல்லை என்று சொன்ன போது, ராமனின் முகம் மலர்ந்த தாமரையாக மாறியது.

அப்படித்தான் எம்ஜிஆர் சந்தோஷமாக இருந்தார். “ஹண்டே கவலைப்படாதீர்கள்” என்றார்.

“இந்திரா நமக்கு நல்ல சவ்ரியம் (சவுகரியம்) செய்து கொடுத்து இருக்கிறார். எனக்கு மக்களை சந்திப்பதற்கான வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்” என்றார்.

அப்போது அங்கு ஆனந்தவிகடன் மணியன் இருக்கிறார்.

சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்…(சிரிக்கிறார்) … நாங்கள் மூன்று பேரும் உட்லன்ஸ் ட்ரைவின் ரெஸ்டராண்டில் மசால் தோசை, டிபன் சாப்பிட்டோம் ஆனந்தமாக…


நீங்கள் எதிர்த்து நின்றால்…50:50

மாநிலம் முழுவதும் சென்று எம்ஜிஆர் மக்களை சந்தித்தார்.

“என்னுடைய ஆட்சியை ஏன் நீக்கினார்கள்? நான் என்ன தவறு செய்தேன். என் மீது என்ன குற்றச்சாட்டு சுமத்தினார்கள். இதை அவர்கள் விளக்க வேண்டும். என்னுடைய அமைச்சரவையை ஏன் நீக்கினார்கள்?” என்று தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் பிரச்சாரம் செய்தார்.

தமிழகத்தில் 1980 மே மாதம் சட்டமன்ற தேர்தல். 27, 31 என இரண்டு கட்டமாக நடக்கிறது. அண்ணா நகரில் கலைஞர் போட்டியிடுகிறார்.

எம்ஜிஆரிடம் இருந்து எனக்கு போன் வருகிறது.

“அண்ணா நகரில் கலைஞர் போட்டியிடுகிறார்…

நீங்கள் எதிர்த்து நின்றால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?” என கேட்டார்.

“50:50” என்றேன். அதை 51 சதமாக்க முடியுமா என்றார். “நீங்கள் மனது வைத்தால் முடியும்” என்றேன். என்னை போட்டியிட ஆணையிட்டார் எம்ஜிஆர்.


கலைஞர் இல்லா சட்டசபை எனக்கெதுக்கு? எம்ஜிஆர்

இரண்டாவது கட்டத்தில் அதாவது (31.5.1980) தான் அண்ணா நகர் தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. கலைஞர் நிற்பதால், முதலாவது கட்டத்தில் (21.5.1980) போட்டியிட்ட திமுகவின் மாவட்ட செயலாளர்கள், முக்கிய தலைவர்கள் அண்ணா நகரில் குவிந்தனர். எங்கு பார்த்தாலும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த திமுவினர் தான்.

வாக்கு எண்ணப்படுகிறது. ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் நான் இருக்கிறேன். பச்சையப்பன் கல்லூரியில் ஓட்டு எண்ணப்படுகிறது. திடீரென்று லைட் ஆப் செய்யப்படுகிறது. கடைசியில் 699 ஓட்டு வித்தியாசத்தில் கலைஞர் வெற்றி பெற்றார்.

எனக்கு எம்ஜிஆரிடமிருந்து போன் வருகிறது. கவலைப்பட வேண்டம் ஹண்டே. எனக்கு கலைஞர் சட்டமன்றத்துக்கு வரணும். அவருடன் சும்மா “பைட்” செய்வதற்காகத்தான் உங்களை நிறுத்தினேன்.

எதிர்க்கட்சி தலைவராக கலைஞர் இருந்தால் தான், சட்டசபை சோபிக்கும். அவர் இல்லாத சட்டசபை எனக்கு என்னதுக்கு… உங்களை நான் மந்திரியாக்குகிறேன். மகிழ்ச்சியாக இருங்கள் என்றார்.

ஜூன் 9ந் தேதி கலைவாணர் அரங்கத்தில் பதவியேற்பு விழா. நல்வாழ்வு துறை அமைச்சர் பதவிக்கு என் பெயரை அறிவித்தவுடன் பயங்கர கைத்தட்டல்.


For the First Part of the Interview please click the link below.

MGR's Political Crusade Part 1


21 April 2021

MGR's Spy Network - 2

 Sri MGR Year 104, 21st April, Wednesday

The below video is the continuation of the previous post.



03 April 2021

MGR's Spy Network

Sri MGR Year 104, 3rd April, Saturday


This is the 2nd part of the series. In the below video clip Mr.Varadharajan further explains the brilliant tactics carried out by Puratchi Thalaivar MGR during his first reign from 1977 to 1980.


The above video reveals how MGR used the intelligence to overcome the hurdles created by the DMK party in the assembly and also his spy network in the opposition party.

25 March 2021

MGR பற்றி தெரியாத மர்மங்கள் : RTD Police Varadharajan Interview About In...

Sri MGR Year 104th 25th March, Thursday


Mr.Thangavel has forwarded to me one video from Youtube about Puratchi Thalaivar MGR's brilliance in handling the situations during his regime as the Chief Minister of Tamil Nadu.

It is a series that has been posted on Youtube and this part of the video is the first and intro for MGR becoming the Chief Minister. In the below video clip, Mr.Varadharajan narrates an episode from MGR's life on the first term of his rule. MGR after announcing the populistic schemes came to know that the plans were grounded by the Judicial system, how cleverly MGR trapped his adversaries are revealed in this video.

As per Mr. Varadharajan's observation that MGR is born detective and he is the number one, efficient, and diplomatic Chief Minister of Tamil Nadu.



18 March 2021

One Thousand Dollars

 Sri MGR Year 104th 18th March, Thursday

The below picture was made by someone 10 years back and I posted this on Facebook.


Ayirathil Oruvan Manimaran in the One Thousand Dollar Note.


05 February 2021

KP Ramakrishnan - MGR Body Guard

 Sri MGR Year 104, 5th February, Friday

Myself and srimgr.com team expresses our sincere condolences to Mr. K.P.Ramakrishnan's family. MGR fans have lost one great soul, one of MGR's bodyguards, stunt double, and stunt director Mr.K.P.Ramakrishnan. 

I met him twice, the first time was 31st July 2015 and 2nd time 7th September 2019. The first time I spent nearly 3 hours but the second time it was over 4.5 hours. Mr.K.P.Ramakrishnan's simplicity was one that caught my attention, he was a very humble person.

Below are some of the images I like to share.


Mr.K.P.Ramakrishnan in his private room.


A meeting to be cherished in my life


Mr.Govindaraj, his elder son who has given me an opportunity to meet him privately


MGR Devotee Venkat


Mr.K.P.Ramakrishnan sir presenting his book to me


My article about the first meet. 

My article about the second meet.


29 January 2021

MGR's Political Crusade

 Sri MGR Year 104th, 29th January Friday

One of the cabinet ministers in Puratchi Thalaivar MGR's rule, the then Minister of Health and Welfare Department Dr.H.V.Hande has given an interview and that was published in Makkal Kural as two-part series. You can find the first part of the interview below.


அண்ணா திமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் அமைச்சரவையில் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பணியாற்றியவர் டாக்டர் எச்.வி.ஹண்டே.

1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடல்நிலை மோசமானபோது அவரது மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை முன்னின்று நடத்தியவர்களில் ஹண்டே முக்கியமானவர்.

1942 ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு போராட்டகளத்தில் போலீசிடம் அடிவாங்கி நாட்டின் விடுதலை வேள்வியில் பங்கேற்ற பெருமைக்குரியவர் ஹண்டே. அப்போது அவருக்கு 15 வயது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஹண்டே முதன்மையானவர்.

“மக்கள் குரல்” நாளிதழின் சிறப்பு செய்திக்காக எம்ஜிஆருடனான தனது அரசியல் பயணம் பற்றி உற்சாகத்துடன் ஹண்டே நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.


Click the above image to enlarge.


17 January 2021

காலத்தை வென்றவன் - The Reborn King

Sri MGR Year 104, 17th January, Sunday

A fantastic documentary by Kumkumam Sundarrajan on the most turbulent period for MGR and MGR fans, October 1984 to Feb 1985. The documentary is nicely edited with clips of Apollo Hospital, prayers rendered by people from all walks of life, interviews given by Doctors who have treated MGR, and explanations given by Dr.Hande. 

Below is the Documentary from Youtuber Tamizh.xyz, titled Kalathai Vendravan (காலத்தை வென்றவன்)


Intro and Epilogue are given by Makkal Neethi Mayyam Leader Kamal Hassan. 

While watching the video my eyes glistened a couple of times. How many times you shed tears?

01 January 2021

Happy New Year 2021

 Sri MGR Year 103rd, 1st January, Friday

We srimgr.com team wishes its readers a Happy New Year 2021. Below is the digital work of MGR devotee Venkat for new year's wishes and the 33rd Death anniversary.





M.G.R. Blog to you via E mail

M.G.R. Blog to you via E mail
Related Posts Plugin for WordPress, Blogger...

All Time Popular Posts