Total Pageviews

Vettaikaran Golden Jubilee

Golden Jubilee Padagotti

15 March 2012

A Poem To Puratchi Thalaivar

Sri MGR Year 95, 15th March, Thursday

MGR Devotee Bangalore S.Vinod has forwarded a poem written by MGR Fan Ganesh. Below is the poem.

 
எல்லாமும் நீயே!
 
தாயுமானவன் -எமக்குத்
தந்தையானவன்
அன்னை, தங்கை, அன்பு, பாசம், இன்ன பிற உறவுகளாய் -
என்றும் வாழும் நீ
எங்கள் இதயத்தில் பூத்த மலர்!
மண்ணில் "இவர்போல் யரென்று" வாழ்வாங்கு வாழ்ந்தாய்!
விண்ணில் இருந்தும் இன்றும் நீ
என்னில் இருப்பவன்!
 
மாசில்லா உண்மை மனிதன் நீ!
என்றும் மற்றவர்க்கு வாழும் பேரிதயம் உனக்கு!
வேசியையும் மன்னித்த இயேசு போல, உன்னைத்
தூற்றுவோரையும் ஏற்றிவைத்து அழகு பார்க்கும்
மாற்றில்லாத்தலைவன் நீ!
 
எங்கோ இருக்கும் இறைவனை
எல்லாமறிந்தவர்கள் போல் எப்போதும் வணங்கும் -
உழைக்காத கூட்டமொன்று இருக்குது!
"மழித்தலும் நீட்டலும் வேண்டாம்!" என்று
மழலைச் சிரிப்பில் இறைவனைக் கண்டவன் நீ! உன் உருவில்,
மறையாவரம் பெற்ற கடவுளைக் கண்டோம் -ஆம்
உன் கருணையிலே கடவுளையே கண்டோம்!
 
உன்னை நம்பிக் கெட்டவர்கள் கிடையாது!
உன்னைத் திட்டியவகள் கூட கேட்டது இல்லை!
உன்னை நம்பாதவரையும் நீ கெடுத்தது இல்லை!
உன்னை நினைத்தாலே நம்பிக்கை வந்துவிடும்!
 
நீ எல்லோரையும் புரிந்துகொண்டவன்!
உன்னை எல்லோருக்கும் புரியவைத்தவன்!
உன்னையே நீ அறிந்தவன் -அதனால்
பிறரிலும் வாழ்பவன்!
 
பசித்தவருக்கு உணவு தந்தாய்! -நலிந்தவனுக்கு
கல்வி தந்தாய்... இன்னும் வாழ்வு தந்தாய்!
நீ இன்று வந்தால், உன் உயிரையும் தருவாய்! -அதனால்,
நீ வருவதென்றால் -தலைவா
என் உயிரையும் தருவேன்!
 
 
புரட்சித் தலைவரின் அன்புத் தொண்டன்,
 
 

M.G.R. Blog to you via E mail

M.G.R. Blog to you via E mail
Related Posts Plugin for WordPress, Blogger...

All Time Popular Posts